பரமக்குடியில் அ.தி.மு.க நிர்வாகிகள் அமைப்பு தேர்தல்
இராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க.நிர்வாகிகளுக்கான அமைப்பு தேர்தல் அந்தந்த பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ.செந்தில்நாதன் உட்பட பலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதை தொடர்ந்து பரமக்குடி கீர்த்தி மஹாலில் பரமக்குடி, போகலூர், நயினார் கோயில் ஆகிய ஒன்றிய பொறுப்புகளுக்கும், பரமக்குடி நகர் பொறுப்புகளுக்கும் ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு விருப்ப மனு அளித்தனர்.
அந்த விருப்ப மனுக்களை மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர்.முத்தையா, சதன் பிரபாகர், பரமக்குடி நகர் செயலாளர் ஜமால், ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி, முத்தையா, லோகிதாசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி, நகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் வடமலையான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் || பரமக்குடியில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகளை எம்.எல்.ஏ முருகேசன் தொடங்கி வைத்தார்