Friday, March 29, 2024
Homeஆன்மிகம்கெடுதல்களில் இருந்து விடுபட பரிகாரங்கள்

கெடுதல்களில் இருந்து விடுபட பரிகாரங்கள்

கெடுதல்களில் இருந்து விடுபட பரிகாரங்கள்

சூரிய பகவான்

ஏழு வகையான தானியங்களை சனிக்கிழமை ஊற வைத்து பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை பொடி செய்து எறும்புகளுக்கு உணவாக ஏழு ஞாயிற்றுக்கிழமை செய்து வர சூரியனால் உண்டாகும் கெடு பலன்கள் குறையும்.

சந்திர பகவான்

வளர்பிறை திங்கள் கிழமை வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும். சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

செவ்வாய் பகவான்

தேய்பிறை செவ்வாய்க்கிழமை புதிதாக இனிப்பு வாங்கி யாசகனுக்கு தானம் செய்து வந்தால் செவ்வாய் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.

புதன் பகவான் 

செம்பில் கங்கை நீரை பூஜை அறையில் வைத்தால் புதன் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.

குரு பகவான்

குங்குமப்பூவை வியாழக்கிழமை தோறும் மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றில் திலகம் இட்டு வர குருபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

பரிகாரங்கள்

சுக்ர பகவான்
வெண்ணிற பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து, முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட சுக்கிரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

சனி பகவான் 

கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து வீட்டுப் பின்புற முற்றத்தில் நெருப்பில் போட்டு எரிக்கச் சனிபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

கேது பகவான் 

இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கி ஏழை முதியவர்களுக்கு தானமாக வழங்கினால் கேது பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

ராகு பகவான் 

பாம்பை விலைக்கு வாங்கி காட்டில் கொண்டுபோய் விட்டால் ராகு பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும். இதை நாகபஞ்சமி ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி அன்று செய்யவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments