Tuesday, June 6, 2023
Homeஅரசியல்தமிழ்நாடு ரேஷன் கடையில் காலியாக உள்ள 3803 பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் சேர்க்கப்படும் என அறிவிப்பு

தமிழ்நாடு ரேஷன் கடையில் காலியாக உள்ள 3803 பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் சேர்க்கப்படும் என அறிவிப்பு

ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,803 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாக போகிறதாம்..

அந்த பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் பொது விநியோகத்திட்ட நியாயவிலை கடைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அவ்வப்போது பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடுவது வழக்கம்.

ரேசன் கடைகளில்  காலியிடங்கள்

எத்தனை காலி பணியிடங்கள்

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் 23,502 முழுநேர நியாயவிலை கடைகளும், 9639 பகுதிநேர நியாயவிலை கடைகள் என மொத்தம் 33,141 கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நியாயவிலை கடைகளில் 31.12.2021 தேதியில் 3,176 விற்பனையாளர், 627 கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுத்து காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தனியே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

பணியாளர்களின் பொறுப்பு

தற்போது 3,836 விற்பனையாளர்கள் தலா ஒரு நியாயவிலை கடையினை கூடுதலாக நிர்வகித்து வருகின்றனர். 1,128 விற்பனையாளர்கள் தலா 2 நியாயவிலை கடைகளையும், 222 விற்பனையாளர்கள் 3 கடைகளையும், 4 நியாயவிலை கடை, 15 விற்பனையாளர்கள் தலா 5 நியாயவிலை கடைகள் மற்றும் அதற்கு கூடுதலாக கடைகளை நிர்வகித்து வருகின்றனர்.

ஒரு தாய்க்கடையுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிநேர கடைகளை கவனித்து கொள்வது கூடுதல் பொறுப்பின் கீழ் வராது.

ரேசன் கடைகளில்  காலியிடங்கள்

அரசின் முக்கிய நடவடிகக்கை

ஆயினும், ஒரே பணியாளர் இரண்டுக்கு மேற்பட்ட முழுநேர நியாயவிலை கடைகளை பொறுப்பேற்று செயல்படுத்தி வருவது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோக திட்ட பணிகளை திறமையாக செயல்படுத்துவதற்கு இடையூறாக அமையும்.

எனவே முழுநேர நியாய விலை கடையின் விற்பனையாளர் கூடுதலாக ஒரே ஒரு முழுநேர நியாயவிலை கடையின் பொறுப்பினை மட்டும் வகித்து வருவதை இணைபதிவாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரேசன் கடைகளில்  காலியிடங்கள்

இதுதொடர்பாக நியாயவிலை கடை பணியாளர்கள் கூறியதாவது, “தங்களது பணிச் சுமையை குறைக்க ஒரு நியாயவிலை கடைக்கு ஒருவிற்பனையாளர், ஒரு கட்டுநர் என்ற வகையில் ஆட்களை நியமித்தால் நல்லது” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

 

இதையும் படியுங்கள்|| ஊழியர்களுக்கு வார சம்பள முறையை அமல்படுத்தியுள்ளது இந்தியா மார்ட் நிறுவனம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments