வாரத்தில் 7 நாட்களும் வழிபட வேண்டிய கோவில்கள்.
1. ஞாயிறு – பால மாருதி
ராகு தோஷம், திருமண தடை நீங்கும், கண் பார்வை நிவர்த்தியாகும். சூரிய உதயத்தில் வழிபட வேண்டும்.
2. திங்கள் – யோக மாருதி
மன அமைதி, குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும்.
3. செவ்வாய் – தீர மாருதி
வெற்றிலை மாலை அணிவித்து, செந்தூர அர்ச்சனையால் வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும்.
4. புதன் – பஜனை மாருதி
முற்பிறவியில் செய்த பாப தோஷங்கள் விலகும்.
5. வியாழன் – வீர மாருதி
எலுமிச்சை மாலை அணிவித்து வழிபட்டால் குறைவற்ற செல்வமும், கைவிட்டுப் போன பொருள் கிடைக்கும்.
6.வெள்ளி – தியான மாருதி
பெண்கள் வழிபட கணவரின் எதிரிகள் நீங்கி, குழந்தைகளுக்கு கல்வி மேம்பாடு கிட்டும்.
7. சனி – பக்த மாருதி
நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சனியினால் ஏற்படும் ஆபத்து நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும்.
8. பவ்ய மாருதி
பிறந்த கிழமைகளில் வழிபட்டால் ராகு, கேது திசை பாதிப்பு நீங்கும். செய்தொழிலில் வெற்றி கிடைக்கும். குழப்பங்கள் நீங்கி மன அமைதி கிட்டும்.
9. சஞ்சீவி மாருதி
பிரதோச காலங்களில் வடை மாலை சாற்றி வழிபட்டால் தீராத நோய்கள் தீரும்.
வழித் தடம் : திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சிலுவத்தூர் சாலையில் ரவுண்டு ரோடு, ராம் நகர் ஸ்டாப்பில் இறங்க வேண்டும்.
இதையும் படியுங்கள் || கஷ்டம் போக்கும் பரிகாரங்கள்