Tuesday, March 19, 2024
Homeராமநாதபுரம்இராமநாதபுரம் மாவட்டம் பள்ளிக்கல்வித் துறை மூலம் மாதிரிப்பள்ளி திறப்பு

இராமநாதபுரம் மாவட்டம் பள்ளிக்கல்வித் துறை மூலம் மாதிரிப்பள்ளி திறப்பு

இராமநாதபுரம் மாவட்டம் பள்ளிக்கல்வித் துறை மூலம் மாதிரிப்பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப, அவர்கள் தொடங்கி வைத்தார் !!!

இராமநாதபுரம் மாவட்டம், செய்யது அம்மால் பொறியியல் கல்லூரி வாகத்தில் இன்று (06.10.2022) பர்ளிக்கல்வித் துறை மூலம் மாதிரிப்பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஜானி, டாம் எள்னீஸ், இ.ஆப்ட், அவர்கள் தொடங்கி வைத்து தெரிவிக்கையில்,அரசுப்பள்ளி  படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்காள வாய்ப்பை வழங்கும் வகையிலும், அரசுப் பள்ளிகள் சிறந்த கல்வி நிறுவனங்களில் தொழில்முறை கல்வி பிரிவுகளில் சேர்ந்து பயிலும் வாய்ப்பினை உறுதி செய்யும் வகையிலும் மாதிரிப் பள்ளிகள் உருவாக்கம் செயப்பட்டு வருகின்றன. அரசின் இட ஒதுக்கிட்டுக் கொள்கையைப் பின்பத்தியும் மாணவர்கள் கல்வி,கலை, மற்றும் விளையாட்டு போன்ற கூடுதல் பாடத்திட்டங்கள் உட்பட அவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனை அடிப்படையாகக் கொண்டும் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுகிறது.

மாதிரி பள்ளியில் பயிலும் மாணவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் முன் உதாரணமாக திகழ வேண்டும். நீங்கள் சார்ந்த பள்ளிக்கும், நமது மாவட்டத்திற்கும் பெருமை தேடித்தரும் பெரிய பொறுப்பு  மாணவர்களாகிய உங்களுக்கு உள்ளது. உங்களது வெற்றி மாணவர்களும், அடுத்து வரும் இளைய சமுதாயத்தினரும் உங்களை பின்பற்றி அவர்களையும் வெற்றியடைய செய்யவேண்டும். நீங்கள் மட்டுமல்லாது உங்களது குடும்பம் மற்றும் கிராம மக்களை மேம்படுத்த நன்றாக படித்து முன்னேற வேண்டும். ஏற்கனவே நமது மாவட்டத்தில் இதுபோன்ற பயிற்சி மற்றும் வழிகாட்டி நிகழச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. நமது மாநிலத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

தற்போது பனிரெண்டாம் வகுப்பு பயினும் 180 மாணவார்களும், பதினொன்றாம் வகுப்பு பயிலும் 160 மாணவர்களும் இந்த மாதிரி பள்ளியில் பயிற்சி பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்பள்ளியில் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்கள் 100% தாங்கள் எழுதிய தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெரும் வகையில் ஆசிரியர்கள் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட திறமையினை ஒரு மாசத்தில்  கண்டுபிடித்துஅவர்களின் இலக்கை எய்திட வழிகாட்ட வேண்டும்.

நீட் மட்டுமே நுழையுத் தேர்வு அல்ல பல்வேறு போட்டி தேர்வுகள் மாற்றும் நுழையுத்தேர்வுகளை தெரிந்து கொண்டு அதற்கான பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளோடு பிற பொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து விதமான உட்கட்டமைப்பு வசதிகளும் மாதிரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளன. எனவே மாதிரி பள்ளியில் பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் தாங்கள் எழுதிய போட்டி தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமை சேர்க்கவேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்தார்;

இந்நிகழ்ச்சியில் செய்யது அம்மான் பொறியியல் கல்லூரி தாளாளர் டாக்டர்.சின்னதுரை அப்துல்லா அவரகள், மாவட்ட கல்வி அலுவர்கள் திரு.ரவி அவர்கள், பிரின்ஸ் ஆரோக்கியராஜ் அவர்கள், மாநில மாதிரி பள்ளி ஒருங்கிணைப்பாளர் திரு.நவநீதகிருஷ்ணன் அவர்கள், தலைமையாசிரிய திரு.ரவி அவர்கள், உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர், பலர் கலந்து கொண்டனர்

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், இராமநாதபுரம்,

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments