பரமக்குடியில் விரைவில் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம்.
பரமக்குடியில் அசல் பட்டு நூல் உயர்வை கட்டுப்படுத்த கோரி அனைத்து கைத்தறி நெசவாளர்கள், அனைத்து தொழிற் சங்கத்தினர் மற்றும் கைத்தறி பட்டு, ஜவுளி உற்பத்தியாளர்கள் இணைந்து கடையடைப்பு செய்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
உண்ணாவிரதப் போராட்டம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பட்டு நூல் மற்றும் ஜரிகை வரி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், ஜி.எஸ்.டி வரியை முழுவதும் நீக்கக் கோரியும், 60 வயது முதிர்ந்த நெசவாளர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க கோரி பரமக்குடி, எமனேஸ்வரம் கைத்தறி நெசவாளர்கள் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கடையடைப்பு செய்து நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் அசல் பட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், இல்லையென்றால் விரைவில் நெசவாளர்கள் கஞ்சித்தொட்டி போராட்டம் நடத்த இருப்பதாக போராட்டக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு
இப்போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்திறி நெசவாளர்கள் கலந்து கொண்டனர். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கைத்தறி பட்டு ஜவுளி சிறு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் கேசவராமன் தலைமை தாங்கினார். போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் கோவிந்தன், குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம்
பரமக்குடி சௌராஷ்டிரா சபை தலைவர் மாதவன், எமனேஸ்வரம் சௌராஷ்டிரா சபை தலைவர் சேஷய்யன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தனர். உண்ணாவிரதத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள், கட்சி நிர்வாகிகள், நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினர் வாழ்த்துரை வழங்கினார். ஏஐடியுசி மாவட்ட செயலாளர் என்.எஸ்.பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் || மீண்டும் கொரோனா 5 மாநிலங்களில் அதிகரிப்பு