பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் பார்த்திபனூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பார்த்திபனூரில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பரமக்குடி சார் ஆட்சியர் செல்வி.அபிலாஷா கெளர் உத்தரவின் பேரில் பார்த்திபனூர் நகர் பகுதி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை நெடுஞ்சாலை துறை இணைந்து அகற்றினர். பார்த்திபனூர் வழியாகத்தான் கமுதி, அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம், நரிக்குடி, குற்றாலம் போன்ற மார்க்கங்களுக்கு பார்த்திபனூர் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வருவதால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உடன் பரமக்குடி வட்டாட்சியர் வரதன், நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் தன்வந்திரி ஆகியோர் ஆக்கிரமிப்புகளை ஆற்றினார்.