Tuesday, March 19, 2024
Homeராமநாதபுரம்மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம்

ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம்

 

மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் – மலேசியா பாண்டியன் அறிவிப்பு.

காங்கிரஸ் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்புக் குழு தலைவரும், முதுகுளத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மலேசியா பாண்டியன் பரமக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசை கண்டித்து வரும் 11ந் தேதி மாலை 4 மணிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய தேசிய காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

அதில் முதுகுளத்தூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ஆகிய எனது (மலேசியா பாண்டியன் ) தலைமையிலும், ராமநாதபுரத்தில் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ரமேஷ் பாபு, கோபால் ஆகியோர் தலைமையிலும் பரமக்குடியில் பொறுப்புக் குழு உறுப்பினர் கோட்டை முத்து தலைமையிலும் தொண்டியில் பொறுப்புக் குழு உறுப்பினர் தெய்வேந்திரன் தலைமையிலும் ராமேஸ்வரத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பாரதிராஜன் தலைமையிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.

அதைத் தொடந்து 12ந் தேதி ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும். அதில் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் மலேசியா பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments