Friday, March 29, 2024
Homeசெய்திகள்மோட்டார் வாகன திருத்த சட்டம் அமல்

மோட்டார் வாகன திருத்த சட்டம் அமல்

வாகனங்களுக்கான காலாண்டு வரி நிலுவையை செலுத்தாதோர், இன்று முதல் அபராதத்துடன் செலுத்த வேண்டும்’ என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், போக்குவரத்து வாகனங்களுக்கு, இந்தாண்டுக்கான முதல் காலாண்டு வரியை செலுத்த, மார்ச் 15ம் தேதி கடைசி நாளாக இருந்தது.

இந்நிலையில், ‘காலாண்டு வரியை அபராதமின்றி செலுத்தும் தேதியை மாற்றியமைக்க வேண்டும்’ என, தமிழக லாரி உரிமையாளர்கள், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, போக்குவரத்து துறை கமிஷனர், மார்ச் 31ம் தேதி வரை, காலாண்டு வரியை அபராதமின்றி செலுத்த அவகாசம் வழங்கினார். அவகாசம் நேற்றுடன் முடிவடைந்ததால், இன்று முதல் அபராதத்துடன் செலுத்த, போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

 

இதையும் படியுங்கள் || வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து பரமக்குடியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments