10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர்.ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன
பசும்பொன் தேவர் குருபூஜை விழா பாதுகாப்பில் தென்மண்டல ஐஜி தலைமையில் 10,000 போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பை கண்காணிக்க முதன்முறையாக 14 உயர்தர ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழா நடைபெறுகிறது.நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தேவர் நினைவாலயத்தில் மரியாதை செலுத்தினர்.
அக்.30 குருபூஜை அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறுஅரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர்.இந்நிலையில் பசும்பொன்னில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.
அதன்பின் டிஜிபி செய்தியாளர் களிடம் கூறியதாவது:
தேவர் குரு பூஜை விழாவை முன்னிட்டு தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 4 டிஐஜிக்கள், 34 காவல் கண்காணிப்பாளர்கள் உள் ளிட்ட 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பசும் பொன்னில் மட்டும் ஆயிரம் போலீ ஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
உயர்தர ட்ரோன் கேமராக்கள்
இந்த ஆண்டு முதன்முறையாக⁹ 14 உயர்தர ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும்
95 சிசிடிவி கேமராக்களும் பொருத் தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊரில் இருந்தும் அஞ்சலி செலுத்த வருப வர்களுக்கு பாதுகாப்பு அளிக் கப்படும். பசும்பொன் காவல் கட்டுப் பாட்டு அறையில் இருந்து அனைத்து பகுதிகளையும் கண் காணிக்க முடியும்.
சென்னையில் இருந்து கொண்டே பசும்பொன் காவல் கட்டுப்பாட்டு அறை பணியை என்னால் காணமுடியும். பாதுகாப்புக்கு வந்துள்ள போலீஸாருக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு டிஜிபி தெரிவித்தார்.