- மூவுலகிற்கும் ஏற்பட விருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்திக் காத்த காலவேளையே பிரதோஷ வேளை.
- வளர்பிறை பிரதோஷம், தேய் பிறை பிரதோஷமென மாதம் இருமுறை பிரதோஷம் வரும்.
- திரயோதசி திதியில் சூரிய மறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோஷ காலம் எனப்படும்.
- குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலம். சிவதரிசனம் செய்து எல்லையற்ற நற்பலனைப் பெறுக.
- சூரியனின் நாளான இன்று வரும் பிரதோஷம் சிறப்பானது. காரணம், குருவின் புனர்பூசத்தில் வருகிறது.
- அடுத்தடுத்த ராசியில் சந்திரனும் புதனும் இருக்கும் இந்த அமைப்பில் சிவபிரானை பிரதோஷ வேளை பூஜை செய்ய உடனடி பலன் நிச்சயம்.
- அபிஷேகத்தின் போதும், அலங்காரம் செய்ய திரை போட்டிருக்கும் போதும் மெல்ல கோஷ்டியோடு சேர்ந்து மங்கள தோத்திரங்களைப் பாடுங்கள்.