பரமக்குடியில் பட்ட பகலில் மூதாட்டியை ஏமாற்றி 17 சவரன் நகை திருட்டு
பரமக்குடியில் மனநலம் பாதித்த மூதாட்டியை ஏமாற்றி பீரோவில் இருந்த 17 சவரன் தங்க நகைகளை திருடி சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மனநிலை பாதித்த நாகர்கோவிலை சேர்ந்த ராஜசேகர். இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் நிதி நிறுவன மேலாளராக பணியாற்றி வருகிறார். மனைவி, குழந்தைகள் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் மனநிலை பாதித்த தாயார் தங்கம்மாள் வீட்டில் இருந்துள்ளார்.
தண்ணீர் கேட்பது போல் நடித்து ராஜசேகர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டிற்கு வந்த ஒருவர் தங்கம்மாளிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்து, அவரை திசை திருப்பி பீரோவை திறந்து அதிலிருந்து 17 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 70 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளார்.
மோப்ப நாய் மோப்பநாய் ஜூலி திருடு போனஇடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் தொட்டிச்சி அம்மன் காலனி வரை சென்று நின்று விட்டது. இச்சம்பவம் குறித்து பரமக்குடி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
பரபரப்பு பரமக்குடியில் பட்ட பகலில் மூதாட்டியை ஏமாற்றி 17 சவரன் தங்க நகைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.