பரமக்குடியில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மூன்று ஜோடிகளுக்கு கட்டில், பீரோ, குத்துவிளக்கு என 28 சீர்வரிசைகளுடன் திருமணத்தை பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் நடத்தி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் சார்பாக மூன்று ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமண ஜோடிகளுக்கு நான்கு கிராம் மதிப்புள்ள தங்கம், கட்டில்,பீரோ, மெத்தை, குத்துவிளக்கு, சில்வர் பாத்திரங்கள், புது ஆடைகள் என ஐம்பதாயிரம் மதிப்புள்ள 28 சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், ஆய்வாளர் சுந்தேஷ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.