காரைக்குடியில் மினி மாரத்தான் போட்டி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இதயத்திற்கு நல்லது என ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. மினி மாரத்தான் ஓட்டம் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டிகளில் கலந்து கொண்டவர்கள்
காரைக்குடி தனியார் மருத்துவமனை சார்பில் ஆண்களுக்கு 16 முதல் 25 வயது வரை, 26 முதல் 45 வயது வரை, 50 வயதுக்கு மேல், பெண்களுக்கு 16 வயதிற்கு மேல் என நான்கு பிரிவுகளாக இப்போட்டி நடைபெற்றது. போட்டிக்கு 5.5 கிலோ மீட்டர்தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆண்களுக்கான 16 முதல் 25 வயது பிரிவில், விருதுநகர் வேல்முருகன் முதலிடம் பெற்றார்.திருச்சி பிரகாஷ் இரண்டாமிடம், காஞ்சிபுரம் சுகுமார் மூன்றாமிடம் பெற்றனர். 26 முதல் 45 வயது பிரிவில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த, ரஞ்சித் முதலிடம் பெற்றார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கராஜ் இரண்டாமிடம், கோவையைச் சேர்ந்த விக்டர் மூன்றாமிடம் பெற்றனர்.50 வயதுக்கு மேலானோர் பிரிவில் ஊட்டி அஞ்சுவாளன் முதலிடம், அரியலூர் தண்டாயுதபாணி இரண்டாமிடம், தேனியைச் சேர்ந்த முருகேசன் மூன்றாமிடம் பெற்றனர்.
பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்
போட்டியில் அதிகப்படியான பெண்கள் கலந்து கொண்டனர் பெண்கள் பிரிவில் 16வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். இதில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுஷ்மிகா முதலிடம், அவரது அக்கா வினிதா இரண்டாமிடம், புதுக்கோட்டை லாவண்யா மூன்றாமிடம் பெற்றனர். பரிசளிப்பு விழாவில், அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் க.ரவி,காரைக்குடி காவல் உதவி கண்காணிப்பாளர் ஆர். ஸ்டாலின், துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ்குமார் (தேவகோட்டை), ஆத்மநாதன் (திருப்பத்தூர்) ஆகியோர் வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கினர்.