ராமநாதபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வுக் கோலப் போட்டி நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வுக் கோலப்போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், 11 ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட மகளிர் குழுவினர் வரைந்த கோலங்கள் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வாக்கு உரிமை என்பது ஜனநாயக உரிமை. அதேபோல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்களோடு வரையப்பட்டிருந்த கோலங்களை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், தேர்தல் மகளிர் மன்றம் குழுவினர் கலந்துகொண்டனர் வட்டாட்சியர் வி.ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்