Saturday, December 2, 2023
Homeசெய்திகள்நெசவாளர்களின் கோரிக்கைகள் நிறை வெறும் வகையில் அமைக்கப்பட்ட !நெசவாளர் குறை தீர்க்கும் மையம்

நெசவாளர்களின் கோரிக்கைகள் நிறை வெறும் வகையில் அமைக்கப்பட்ட !நெசவாளர் குறை தீர்க்கும் மையம்

நெசவாளர்களின் கோரிக்கைகள் நிறை வெறும் வகையில் அமைக்கப்பட்ட !நெசவாளர் குறை தீர்க்கும் மையம்

2021-2022ம் ஆண்டின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களால் கைத்தறி ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டத் தொடர்ந்து, கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவும், நெசவாளர்களின் குறைகளான வேலை வாய்ப்பு, கூலி உயர்வு, கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும்.

குறை தீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது

அவர்களின் குறைகளை தெரிவிக்க எதுவாகவும் கைத்தறி துறை ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தில் நெசவாளர்கள் தங்கள் குறைகளை கீழ்காணும் வழிமுறைகளில் தெரிவித்து தீர்வு பெறலாம்.துணை இயக்குநர் (அமலாக்கம்) / குறை தீர்க்கும் அலுவலர், நெசவாளர் குறை தீர்க்கும் மையம், கைத்தறி ஆணையரகம், குறளகம் 2-ம் தளம், சென்னை -104 என முகவரியிட்டு கடிதம் மூலமாக நெசவாளர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

நெசவாளர்கள் குறைகளை தீர்க்க நடவடிக்கை

நெசவாளர் குறை தீர்க்கும் அலுவலரை அரசு அலுவலக வேலை நாட்களில், காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் அணுகி நெசவாளர் தங்கள்குறைகளை தெரிவிக்கலாம். (தொலைபேசி எண்: 044-25340518) நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தின் இணைதயளம் முகவரி: https://gdp.tn.gov.in/dhi நேரம்: 24×7, நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தின் மின்னஞ்சல் [email protected] நேரம்: 24×7. மேற்படி வழிகள் மூலம் நெசவாளர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments