Tuesday, October 3, 2023
Homeராமநாதபுரம்பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க நடடிக்கை திட்டம்

பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க நடடிக்கை திட்டம்

நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க 950 எக்டர் இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படும். ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 5 எக்டர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்துத் தரப்படும்.

துணை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறு அமைப்பதற்கும், டீசல் பம்பு செட்/மின்சார மோட்டார் பம்பு செட் அமைப்பதற்கும், அரசு மானியம் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்டுள்ள திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் https://tnhorticulture.tn.gov.in:8080/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments