டோக்கன் வழங்கும் அலுவலகம் முன்பாக ஏஐடியுசி மீனவத்தொழிலாளர் சங்கத்தினர் மறியல்
ராமேசுவரம் மீன்பிடி இறங்கு தளத்தில் உள்ள மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் அனுமதி டோக்கன் வழங்கும் அலுவலகம் முன்பாக ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்கத்தினர் மறியல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ரமேசுவரத்தில் மீன்பிடிக்கச்செல்லும் 22 பைபர் படகுகளில் 18-க்கு மட்டும் அனுமதி டோக்கன் வழங்கப்படுவதாகவும், மீதமுள்ள 4 பைபர் படகுகளுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்படுவதில்லை எனக் கூறியும், இதைக் கண்டித்தும் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார்
இவர்களிடம் மீன்வளத் துறை அதிகாரிகள், போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் அனைத்து பைபர் படகுகளுக்கும் அனுமதி டோக்கன் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.