இராமநாதபுரம் மாவட்ட இராமேசுவரத்தில் நடந்த நடைபயண தொடக்க விழாவில் அண்ணாமலை தொடங்கினார்.
விழாவின் போது அண்ணாமலையின் உரை
இந்த நடைப்பயணம், வெறும் அண்ணாமலையின் நடைப்பயணம் அல்ல. இது ஒவ்வொரு பா.ஜ .க. தொண்டனின் நடைப்பயணம். கூட்டணி கட்சியினரின் நடைப்பயணம். விவேகானந்தர் கால்நடையாக கன்னியாகுமரியில் இருந்து ராமேசுவரம் வரை நடந்தே வந்தார். அதேபோல் அமெரிக்காவிற்கு சென்று திரும்பிய விவேகானந்தர் ராமேசுவரத்தில் வந்து இறங்கினார். இந்த வார்த்தையை, மெய்ப்பட வைத்தவர் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
இன்றைக்கு உலகம் முழுவதும் இந்தியாவை பெருமைப்பட வைத்து இருக்கிறார். கோடிக்கணக்கான இந்தியர் வறுமையில் இருந்து மீட்டு இருக்கிறார்.
எனவேதான் சாதாரண மனிதர்களுக்கான ஆட்சி நடத்தி வருகிறார். பாரத தாய் போல தமிழ் தாயும் இனி விழித்து எழ வேண்டும். தி.மு.க. அரசு வெறும் ஒரு ஊழல் செய்யும் அரசாகத்தான் இருக்கிறது. ஒரு குடும்பம்தான் சம்பாதிக்கின்றனர். தமிழகத்திற்கு இதுவரை கிடைக்காத திட்டங்கள் எல்லாம் மோடியின் ஆட்சியில் கிடைத்திருக்கின்றன.மோடி மனதளவில் தமிழராக வாழ்கிறார். தமிழை நேசிக்கிறார்.