இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு
அதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கருணை அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கியும், தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் மாநில அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் திருவாடனை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் நவீன்குமார் முதலிடம் பெற்றமைக்காக பாராட்டு சான்று மற்றும் நினைவு பரிசு வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், பாராட்டினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு , ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) அபிதா ஹனிப் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) மாரிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.