Thursday, March 28, 2024
Home Blog Page 3

வெள்ளிக்கிழமை அன்று என்னென்ன செய்யக்கூடாது

  1. வெள்ளிக்கிழமை மகத்துவம் நிறைந்த நாளாகவும், ஆன்மீக வழிபாட்டிற்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.
  2. வெள்ளிக்கிழமை துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.
  3. இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாள் என்பது ஐதீகம்.
  4. வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு. இதனால் சகல செல்வங்களும் சேரும்.
  5. பெண்கள் வீட்டை வைத்துக்கொள்வதை பொறுத்துதான் மகாலட்சுமி அருள் வீட்டிற்கு கிடைப்பதும், கிடைக்காததும் உள்ளது.

பெண்கள் வெள்ளிக்கிழமை அன்று என்னென்ன செய்யக்கூடாது

  1. பெண்கள் காலை எழுந்தவுடன் அடுப்பு துடைக்கக்கூடாது.
  2. வாசலில் புள்ளி வைத்த கோலம் போடக்கூடாது.
  3. பிறகு அழுக்குத்துணிகளை சேர்த்து வைக்கக்கூடாது.
  4. முக்கியமாக பெண்கள் ஒட்டரை அடிக்கக்கூடாது.
  5. சமையலில் அன்று பருப்பு சேர்க்காமல் குழம்பு வைக்கக்கூடாது.

இவை எல்லாம் வெள்ளிக்கிழமை செய்யக்கூடாதவை.

செய்யவேண்டியவை

  1. வெள்ளிக்கிழமைக்கு முதல்நாளே அடுப்பை துடைத்து வைக்க வேண்டும்.
  2. வாசலில் தாமரைக்கோலம் போட்டால் வீட்டுக்குள் மகாலட்சுமி வருவதாக ஐதீகம்.
  3. பொதுவாக வெள்ளிக்கிழமை மட்டுமில்லாமல் பெண்கள் ஒட்டரை அடிக்கக்கூடாது. ஏனெனில் கடன்களை அதிகரிக்கும்.
  4. ஆண்கள்தான் ஒட்டரை அடிக்க வேண்டும்.
  5. பருப்பு சேர்த்துதான் அன்று குழம்பு வைக்கவேண்டும்.
  6. அப்படி வைக்க பருப்பு இல்லையென்றால் ஒரு நான்கு, ஐந்து பருப்பாவது சாதம் வேகும்போது அதில் போட்டு வடிக்க வேண்டும்.
  7. வெள்ளிக்கிழமைகளில் இதை செய்யக்கூடாது என்று பெண்களுக்கு இருக்கும்.
  8. சில கட்டுப்பாடுகள் போல ஆண்களும் சில செயல்களை வெள்ளிக்கிழமை அன்று செய்யக்கூடாது என கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆண்கள் வெள்ளிக்கிழமை அன்று என்னென்ன செய்யக்கூடாது

  1. வெள்ளிக்கிழமைகளில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.
  2. ஆண்கள் வெள்ளிக்கிழமை அன்று முகசவரம் செய்யக்கூடாது.
  3. வெள்ளிக்கிழமை அன்று தேவையில்லாத விரய செலவுகளை செய்யக்கூடாது.
  4. இந்த மூன்றையும் கண்டிப்பாக வெள்ளிக்கிழமைகளில் செய்யாமல் இருப்பது நல்லது.
  5. இதனால் நேர்மறை எண்ணங்கள் உண்டாகும். செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

புதிய பார்வை ராசிபலன்(29-09-2023)

இன்றைய நாள்

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, புரட்டாசி 12
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ பௌர்ணமி – Sep 28 06:49 PM – Sep 29 03:27 PM

கிருஷ்ண பக்ஷ பிரதமை – Sep 29 03:27 PM – Sep 30 12:21 PM

நட்சத்திரம்

உத்திரட்டாதி – Sep 29 01:48 AM – Sep 29 11:18 PM

ரேவதி – Sep 29 11:18 PM – Sep 30 09:08 PM

கரணம்

பவம் – Sep 29 05:07 AM – Sep 29 03:27 PM

பாலவம் – Sep 29 03:27 PM – Sep 30 01:52 AM

கௌலவம் – Sep 30 01:52 AM – Sep 30 12:21 PM

யோகம்

வ்ருத்தி – Sep 28 11:54 PM – Sep 29 08:03 PM

துருவம் – Sep 29 08:03 PM – Sep 30 04:27 PM

வாரம்

வெள்ளிக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:11 AM
சூரியஸ்தமம் – 6:08 PM

சந்திரௌதயம் – Sep 29 6:18 PM
சந்திராஸ்தமனம் – Sep 30 6:46 AM

அசுபமான காலம்

இராகு – 10:40 AM – 12:10 PM

எமகண்டம் – 3:09 PM – 4:39 PM

குளிகை – 7:41 AM – 9:10 AM

துரமுஹுர்த்தம் – 08:35 AM – 09:22 AM, 12:34 PM – 01:21 PM

தியாஜ்யம் – 10:13 AM – 11:40 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:46 AM – 12:34 PM

அமிர்த காலம் – 07:00 PM – 08:26 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:35 AM – 05:23 AM

ஆனந்ததி யோகம்

துவஜ Upto – 11:18 PM
ஸ்ரீவச்சம்

பண்டிகைகள் மற்றும் விரதங்கள்

பௌர்ணமி விரதம்
பௌர்ணமி
மகாளய பட்சம் ஆரம்பம்

வெள்ளி ஹோரை

காலை

06:00 – 07:00 – சுக் – சுபம்
07:00 – 08:00 – புத – சுபம்
08:00 – 09:00 – சந் – சுபம்
09:00 – 10:00 – சனி – அசுபம்
10:00 – 11:00 – குரு – சுபம்
11:00 – 12:00 – செவ் – அசுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – சூரி – அசுபம்
01:00 – 02:00 – சுக் – சுபம்
02:00 – 03:00 – புத – சுபம்

மாலை

03:00 – 04:00 – சந் – சுபம்
04:00 – 05:00 – சனி – அசுபம்
05:00 – 06:00 – குரு – சுபம்
06:00 – 07:00 – செவ் – அசுபம்

வாரசூலை

சூலம் – மேற்கு

பரிகாரம் – வெல்லம்

இன்றைய ராசிபலன் 

மேஷம்

புதுவிதமான பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உடனிருப்பவர்களால் புதிய புரிதல் ஏற்படும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் காலதாமதமாக முடியும். சக ஊழியர்களிடத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அஸ்வினி : அனுபவம் கிடைக்கும்.

பரணி : புரிதல் ஏற்படும்.

கிருத்திகை : வாதங்களைத் தவிர்க்கவும்

ரிஷபம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். செயல்களில் தன்னம்பிக்கை வெளிப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். நிர்வாக பணிகளில் மேன்மை உண்டாகும். எதிர்ப்புகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

ரோகிணி : ஆசைகள் நிறைவேறும்.

மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.

மிதுனம்

செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் நம்பிக்கை மேம்படும். தந்தை வழியில் அனுகூலமான சூழல் அமையும். ஆராய்ச்சி பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். இணைய பணிகளில் கவனத்துடன் செயல்படவும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நிறம்: சந்தன வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : நம்பிக்கை மேம்படும்.

திருவாதிரை : முன்னேற்றமான நாள்.

புனர்பூசம் : பயணங்கள் கைகூடும்.

கடகம்

வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். ஆராய்ச்சி பணிகளில் ஆர்வம் ஏற்படும். காப்பீடு சார்ந்த செயல்களில் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் முதலீடு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் தெளிவு பிறக்கும். நிர்வாகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

புனர்பூசம் : துரிதம் ஏற்படும்.

பூசம் : ஆர்வம் உண்டாகும்.

ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சிம்மம்

எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். பயனற்ற அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். கடன் சார்ந்த செயல்களில் பொறுமையைக் கையாளவும். உறவுகளிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மாற்றத்தை உருவாக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

மகம் : கவனம் வேண்டும்.

பூரம் : விவேகத்துடன் செயல்படவும்.

உத்திரம் : மாற்றம் பிறக்கும்.

கன்னி

முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். சிலரின் சந்திப்புகளால் மாற்றங்கள் பிறக்கும். மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். சுபச்செய்திகளால் நெருக்கடிகள் உண்டாகும். மாற்றமான நாள்.

அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நிறம்: மயில் நீலம்

உத்திரம் : தடுமாற்றம் உண்டாகும்.

அஸ்தம் : தன்னம்பிக்கை மேம்படும்.

சித்திரை : நெருக்கடிகள் உண்டாகும்.

துலாம்

வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளால் இருந்துவந்த தடைகள் விலகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாய் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் செயல்திறன் அதிகரிக்கும். விவசாயம் தொடர்பான புதிய முயற்சிகள் சாதகமாகும். லாபம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

சுவாதி : ஆரோக்கியம் மேம்படும்.

விசாகம் : முயற்சிகள் சாதகமாகும்.

விருச்சிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். கூட்டாளிகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மேல்நிலைக் கல்வி பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

அனுஷம் : சிந்தனைகள் மேம்படும்.

கேட்டை : ஆதாயம் உண்டாகும்.

தனுசு

எதிர்பாராத சிலரின் சந்திப்பு உண்டாகும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். முக்கியமான பொறுப்புகள் சாதகமாகும். திருப்தியற்ற மனநிலை குறையும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்பு மேம்படும். மனை மற்றும் வாகன விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வசதிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்

மூலம் : சந்திப்பு உண்டாகும்.

பூராடம் : முடிவுகள் கிடைக்கும்.

உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.

மகரம்

புதிய நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதம் குறையும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற சாமர்த்தியம் மேம்படும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். பெரியவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சோர்வு குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : தாமதம் குறையும்.

திருவோணம் : மாற்றம் உண்டாகும்.

அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.

கும்பம்

வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். வாக்குவன்மையால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோக பணிகளில் மதிப்பு மேம்படும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்பு உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சாம்பல்

அவிட்டம் : லாபம் மேம்படும்.

சதயம் : பிரச்சனைகள் குறையும்.

பூரட்டாதி : ஒத்துழைப்பு உண்டாகும்.

மீனம்

மனதளவில் ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பயனற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பணி நிமிர்த்தமான ரகசியங்களில் கவனம் வேண்டும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வழக்குகளில் இழுபறியான சூழல் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

பூரட்டாதி : குழப்பம் நீங்கும்.

உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

ரேவதி : இழுபறியான நாள்.

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி

இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி இராமேஸ்வரம், ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடத்தில் 27.09.2023 முதல் 06.10.2023 முடிய கண்காட்சி நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்

இராமநாதபுரத்தில்  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறையின் மூலம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திடுவதற்கான சிறுதானிய உணவுகளின் சிறப்புகள் குறித்த கண்காட்சியிணை பார்வையிட்டு கர்ப்பிணி பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திட சிறுதானிய உணவு மற்றும் சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமுடன் இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்,வேண்டுகோள்.

மகளிர்களின் தனித்திறமை வெளிப்பட்டது

கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட பனை ஓலை பொருட்கள், கடல் சிப்பி அலங்கார பொருட்கள், மசாலா பொருட்கள், சணல் பைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், சிறு தானிய உணவுகள் மற்றும் தின்பண்டங்கள், சேலைகள், நைட்டிகள், வயர் கூடைகள், உணவுப்பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள், மண்பானைப்பொருட்கள், பனங்கருப்பட்டிகள், அப்பளம், வடகம், சோப் ஆயில், பினாயில் மற்றும் பாசிமணிமாலைகள் முதலியன விற்பனைக்கு வைக்கப்படவுள்ளது.

பொதுமக்கள் இக்கண்காட்சியை பார்வையிட்டு மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களை வாங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.

பரமக்குடியில் இந்திய மாதர் தேசிய விக்சம்மேளன மாவட்டப்பேரவை கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்ட பேரவைக்கூட்டம் ஆர்.டி உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. மாதர் சம்மேளன பேரவைக் கூட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.எஸ். பெருமாள் துவக்கி வைத்தார்.

மாநிலத் துணைத்தலைவர் பி.ராஜலட்சுமி சிறப்புரையாற்றினார், மாநிலக் குழு உறுப்பினர் சுகந்தி, ஏஐடியூசி மாவட்டச் என்.கே, ராஜன், கைத்தறி சம்மேளன மாநில பொதுச்செயலாளர் எஸ்.பி.ராதா, ஏஐடியூசி ஆட்டோ தொழிற் சங்க செயலாளர் சி. ஆர். செந்தில்வேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி செல்வராஜ், கே.ஆர், சுப்பிரமணியன், எஸ்.எம். ஜெயசீலன், பி.ஜீவானந்தம், ஜி. லோகநாதன்,கமுதி தாலுகா செயலாளர் சுப்பிரமணியன், டி.எம்.சிவக்குமார்.ஜே.ஆர்,ஹரிஹரன், எம். முருகையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு – விமர்சனம்

சரத், அயிரா, நரேன், அருவி மதன், இளையான் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஹரி உத்ரா இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் எண் 6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு, ஏழை மாணவர் களை ஒன்றினணத்து மாற்று திறனாளி பயிற்சியாளர் ஒருவர் கால் பந்தாட்ட குழு ஒன்றை உருவாக்குகிறார்.

அவர்கள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் விளையாடுவதற்காக போராடுகிறார். ஆனால் அவர்களுக்கு தகுதி இருந்தும்…

திறமை மறுக்கப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடையும் அந்த இளம் கால் பந்தாட்ட வீரர்கள் எடுக்கும் அதிரடி முடிவுதான் இப்ப டத்தின் திரைக்கதை. நாயகன் சரத் சிறப்பாக நடித்து அசத்துகிறார். நாயகி அயிராஇளமை, அழகும் கலந்த கலவையாக திகழ்கிறார்.

கால் பந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருக்கும் அருவி மதன் தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். புது முகங்களை வைத்து குறைந்த முதலீட்டில் எடுத்திருக்கும் இயக்குநரின் முயற்சியை நிச்சயம் பாராட்டாலம்.

மனித உடலுக்கு மருந்தாகும் எலுமிச்சை பழங்கள்

  • மூளை – கோளாறு

எலுமிச்சையின் தோல் பகுதியில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டு டாங்கரெட்டின் பார்கின்சன் நோய் போன்ற மூளை கோளாறுகளை சரிசெய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • விழித்திரை – நோய்

எலுமிச்சையில் காணப்படும் இரசாயன கலவையான ருட்டின், நீரிழிவால் ஏற்படும் விழித்திரை நோயை குணபடுத்தும்.

  • குடல் – சுத்தம்

எலுமிச்சை குடல் தசையின் இயக்க திறனை அதிகரித்து குடலை சுத்தமாக வைக்க செய்கிறது. குடலில் உள்ள கெட்ட கழிவுகளை அகற்ற எலுமிச்சையின் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து தினமும் காலையில் முதல் வேலையாக குடிக்க வேண்டும்.

  • கல்லீரல் – நச்சுதன்மை

ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் எலுமிச்சை சாற்றை கலந்து, காலையில் குடித்து வந்தால், கல்லீரலில் இருக்கும் நச்சுதன்மை நீக்கும்.

  • பித்தப்பை, சிறுநீரக – கற்கள்

எலுமிச்சையில் காணப்படும் சிட்ரிக் அமிலம் பித்தப்பை கற்கள், கால்சியம் படிகங்கள் மற்றும் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.

  • நீரிழிவு – சர்க்கரை அளவு 

நோயால் ஏற்படும் கண் கோளாறுகளை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், எலுமிச்சையில் இருக்கும் ஹேஸ்பரெட்டின் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, அதை குறைக்க உதவுகிறது.

  • முதுமை – அணுக்கள்

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, முதுமையை ஏற்படுத்தும் அணுக்களை சமன்படுத்தி, இளமையை நீண்ட நாட்கள் தக்க வைக்கும்.

  • புற்றுநோய் – அணுக்கள்

இயற்கையாகவே எலுமிச்சையில்‌ இருக்கும் எண்ணெய், உடலில் புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கின்றன. எலுமிச்சையில் உள்ள ஃப்ளேவோனால் க்ளைகோசைட் புற்று கட்டியில் உள்ள அணுக்கள் அதிகரிக்காமல் தடுக்கின்றன.

  • உடல் – அலர்ஜி

எலுமிச்சையில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், உடலில் ஏற்படும் அலர்ஜி அறிகுறிகளை தடுக்க உதவுகிறது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை வழிபாடு : சகல சௌபாக்கியமும் பெற.. ராகவேந்திரரை வழிபட தவறாதீர்கள்.

  • மகான் ஸ்ரீராகவேந்திரர் விரதத்துக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. ராகவேந்திர மகானுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் விரதம் இருந்து வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
  • ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து விரதம் கடைபிடித்தால் நம் மனக்குறைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
  • விஷ்ணு பக்தரான பிரகலாதரின் அவதாரமாக ராகவேந்திரர் கருதப்படுகிறார்.
  • மன அமைதி கிடைக்க, மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய ஒவ்வொரு வியாழக்கிழமையும் ராகவேந்திரருக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு.
  • பக்தர்கள் கேட்டதை மட்டுமின்றி கேட்காததையும் அருள் புரிபவர் தான் ராகவேந்திர மகான்.

விரத முறை

  • விரதம் தொடங்கும் வியாழக்கிழமை அன்று காலையில் குளித்து விட்டு, தூய ஆடை அணிந்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
  • பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மணைப் பலகையில் மகான் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும்.
  • படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து துளசி மாலையை சாற்ற வேண்டும்.
  • அதே போல குத்து விளக்கிற்கும் சந்தனம், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
  • பிறகு, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
  • நைவேத்தியமாக மங்களப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முதலியவைகளை சாமி படத்தின் முன் வைக்க வேண்டும்.
  • பின்னர் பூஜை செய்து ராகவேந்திரரை மனமுருகி வழிபட்டால், அமோகமான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

புதிய பார்வை ராசிபலன்  (28-09-2023)

இன்றைய நாள் 

தமிழ் ஆண்டு, தேதி – சோபகிருது, புரட்டாசி 11
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ சதுர்தசி – Sep 27 10:19 PM – Sep 28 06:49 PM

சுக்ல பக்ஷ பௌர்ணமி – Sep 28 06:49 PM – Sep 29 03:27 PM

நட்சத்திரம்

பூரட்டாதி – Sep 28 04:29 AM – Sep 29 01:48 AM

உத்திரட்டாதி – Sep 29 01:48 AM – Sep 29 11:18 PM

கரணம்

கரசை – Sep 27 10:19 PM – Sep 28 08:34 AM

வனசை – Sep 28 08:34 AM – Sep 28 06:49 PM

பத்திரை – Sep 28 06:49 PM – Sep 29 05:07 AM

பவம் – Sep 29 05:07 AM – Sep 29 03:27 PM

யோகம்

கண்டம் – Sep 28 03:54 AM – Sep 28 11:54 PM

வ்ருத்தி – Sep 28 11:54 PM – Sep 29 08:03 PM

வாரம்

வியாழக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் – 6:11 AM
சூரியஸ்தமம் – 6:09 PM

சந்திரௌதயம் – Sep 28 5:31 PM
சந்திராஸ்தமனம் – Sep 29 5:51 AM

அசுபமான காலம்

இராகு – 1:40 PM – 3:10 PM

எமகண்டம் – 6:11 AM – 7:41 AM

குளிகை – 9:11 AM – 10:40 AM

துரமுஹுர்த்தம் – 10:11 AM – 10:58 AM, 02:57 PM – 03:45 PM

தியாஜ்யம் – 10:24 AM – 11:50 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் – 11:46 AM – 12:34 PM

அமிர்த காலம் – 06:42 PM – 08:07 PM

பிரம்மா முகூர்த்தம் – 04:35 AM – 05:23 AM

ஆனந்ததி யோகம்

முத்தகம் Upto – 01:48 AM
சத்திரம்

பண்டிகைகள் மற்றும் விரதங்கள்

விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

வியாழன் ஹோரை

காலை

06:00 – 07:00 – குரு – சுபம்
07:00 – 08:00 – செவ் – அசுபம்
08:00 – 09:00 – சூரி – அசுபம்
09:00 – 10:00 – சுக் – சுபம்
10:00 – 11:00 – புத – சுபம்
11:00 – 12:00 – சந் – சுபம்

பிற்பகல்

12:00 – 01:00 – சனி – அசுபம்
01:00 – 02:00 – குரு – சுபம்
02:00 – 03:00 – செவ் – அசுபம்

மாலை

03:00 – 04:00 – சூரி – அசுபம்
04:00 – 05:00 – சுக் – சுபம்
05:00 – 06:00 – புத – சுபம்
06:00 – 07:00 – சந் – சுபம்

வாரசூலை

சூலம் – தெற்கு

பரிகாரம் – தைலம்

இன்றைய ராசிபலன்கள் 

மேஷம் 

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். தவறிய சில ஆவணங்கள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான சூழல் ஏற்படும். மறைமுக சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வரவுகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும்.

பரணி : ஆவணங்கள் கிடைக்கும்.

கிருத்திகை : புத்துணர்ச்சியான நாள்.

ரிஷபம்

பணிகளில் துரிதம் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடனிருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்களைப் பற்றிய சிந்தனை மேம்படும். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தாமதம் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : ஆதாயம் ஏற்படும்.

ரோகிணி : பொறுப்புகள் மேம்படும்.

மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். நண்பர்களின் வழியில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் தடைபட்ட சில வாய்ப்புகள் கிடைக்கும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் உழைப்பிற்கான மதிப்பு கிடைக்கும். விரயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : எண்ணங்களை அறிவீர்கள்.

திருவாதிரை : வாய்ப்புகள் சாதகமாகும்.

புனர்பூசம் : மதிப்புகள் கிடைக்கும

கடகம்

மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். வியாபாரப் பணிகளில் லாபம் கிடைக்கும். வாகனம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமாக நிறைவு பெறும். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். ஆதரவுகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : குழப்பங்கள் மறையும்.

பூசம் : சிந்தனைகள் மேம்படும்.

ஆயில்யம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

சிம்மம்

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவுகளின் வழியில் ஆதரவு உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அசதிகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.

பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திரம் : ஆதரவான நாள்.

கன்னி

நெருக்கமானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரப் பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நினைத்த காரியங்கள் கைகூடி வரும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : மதிப்பளித்துச் செயல்படுவீர்கள்.

அஸ்தம் : மேன்மையான நாள்.

சித்திரை : காரியங்கள் நிறைவேறும்.

துலாம்

வருமான உயர்வைப் பற்றிச் சிந்திப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணியாட்களால் சில மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கவலைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : பிரார்த்தனைகள் நிறைவேறும்.

சுவாதி : பொறுப்புகள் மேம்படும்.

விசாகம் : அறிமுகம் உண்டாகும்.

விருச்சிகம்

நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். உறவுகளிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். வாகன பழுதுகளைச் சீர் செய்வீர்கள். பங்குதாரர்களின் ஆதரவு மேம்படும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். நன்மைகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : சந்திப்பு ஏற்படும்.

அனுஷம் : அனுபவம் உண்டாகும்.

கேட்டை : மாற்றம் ஏற்படும்

தனுசு

கடினமான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளால் மதிப்பு மேம்படும். பூர்வீக பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உடனிருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நிலுவையில் இருந்துவந்த பழைய சரக்குகள் விற்கும். உங்களின் பேச்சுக்களுக்கு ஆதரவான சூழல் அமையும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : மதிப்பு மேம்படும்.

பூராடம் : தேவைகள் நிறைவேறும்.

உத்திராடம் : ஆதரவான நாள்.

மகரம்

கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். தொழில்நுட்ப கருவிகளால் விரயம் உண்டாகும். திடீரென சில முடிவுகளை எடுப்பீர்கள். தோற்றப்பொலிவு மேம்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : விரயம் உண்டாகும்.

திருவோணம் : பொலிவு மேம்படும்.

அவிட்டம் : லாபம் கிடைக்கும்.

கும்பம்

வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தவறிய சில வாய்ப்புகளைப் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் விவேகம் வேண்டும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : கனிவு வேண்டும்.

சதயம் : மாற்றம் உண்டாகும்.

பூரட்டாதி : விவேகம் வேண்டும்.

மீனம்

குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். விவசாயப் பணிகளில் அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்களால் மனவருத்தங்கள் நேரிடும். மனதில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

உத்திரட்டாதி : மாற்றமான நாள்.

ரேவதி : வருத்தங்கள் நேரிடும்.

மீண்டும் குடும்ப கதையில் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவியின் 30வது படத்தை எம். ராஜேஷ் இயக்கி வருகிறார். அக்கா, தம்பி கதை களத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படத்திற்கு ‘பிரதர்’ என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இதில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, விடிவி.கணேஷ், சீதா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.’பிரதர்’படம் பற்றி இயக்குநர் எம்.ராஜேஷ் கூறுகையில்,”, கலகலப்பான குடும்ப கதைக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி மீண்டும் திரும்பும் இத்திரைப்படம் 6 முதல் 60 வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் அமையும் என்று நம்புகிறோம், என்றார்.

பற்கள் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

  • பெரும்பாலான மக்களுக்கு, ஆரோக்கியமான வாய்வழி ஆரோக்கியம் என்பது துலக்குதல் மற்றும் நாக்கை சுத்தம் செய்தல் என்பதாகும்.
  • நாம் ஒரு சரியான புன்னகையுடன் இருப்பதை உறுதி செய்வதில் ஊட்டச்சத்து வகிக்கும் பங்கு அவர்களுக்குத் தெரியாது.
  • சத்தான உணவைக் கடைப்பிடிப்பதன் மூலம் உடலுக்கு எல்லாவற்றிலும் சிறந்ததை வழங்குகிறது.
  • ஆரோக்கியமான ஊட்டச்சத்து, ஆரோக்கியமான பற்களுக்கு அவசியமானது.
  • ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள், கால்சியம் நிறைந்த உணவுகள் போன்றவை நிறைந்த சமச்சீர் உணவைக் கொண்டிருப்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், வாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு வாய்வழி சுகாதார பிரச்சினைகளான தொற்றுகள், பல் சிதைவு போன்றவற்றை ஏற்படுத்தும்.
  • ஒருவரின் உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இல்லாவிட்டால், அந்த நபர் வாய்வழி நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • வாய்வழி ஆரோக்கியத்தை பராமரிக்க என்னென்ன சாப்பிட வேண்டுமென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கால்சியம் நிறைந்த உணவுகள்

  • கால்சியம் நிறைந்த பொருட்களை உட்கொள்வது பற்சிப்பி வலுவாக இருக்க உதவுகிறது. அதாவது கால்சியம் சிதைவைத் தடுக்க உதவுவதால் ஈறு நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.
  • பால் பொருட்கள், இலை காய்கறிகள், பாதாம் போன்றவை கால்சியம் நிறைந்த சில உணவுப் பொருட்களாகும், மேலும் பிளேக்குடன் போராடும் வாயில் பாக்டீரியாவை உருவாக்கும் அமிலத்தை நடுநிலையாக்கும்.
  • புரோட்டின் வலுவான பற்கள் என்று வரும்போது புரோட்டினைப் புறக்கணிக்கக்கூடாது. புரதச்சத்து நிறைந்த சில உணவுகள் பட்டாணி, மீன், உலர் பீன்ஸ் போன்றவை.
  • ஆரோக்கியமான பற்களைப் பெற இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

முழு தானியங்கள்

  • ஈறுகள் ஆரோக்கியமாக இருக்க உதவும் இரும்புச்சத்து பெற, முழு தானியம் முக்கியமானது.
  • முழு தானியங்களும் நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் நல்ல வாய் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஆதாரமாக உள்ளன.
  • முழு தானியங்களின் அளவை அதிகரிக்க, பழுப்பு அரிசி, தானியங்கள் போன்றவற்றை ஒருவர் தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

தேங்காய் தண்ணீர் மற்றும் கிரீன் டீ

  • பெரும்பாலான மக்கள் டீ அல்லது காபி சாப்பிட விரும்புகிறார்கள். இருப்பினும், இந்த பானங்கள் நமது வாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதல்ல.
  • அவை பற்களை கறைபடுத்துவதுடன், பற்சிப்பி அரிப்புக்கும் காரணமாகின்றன. கிரீன் டீ மற்றும் தேங்காய் தண்ணீர் போன்ற பானங்களுக்கு மாற பரிந்துரைக்கப்படுகிறது.
  • இவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதே வேளையில் பல் பற்சிப்பியையும் பாதுகாக்கிறது.

போதுமான தண்ணீரைக் குடிக்கவும்

  • தெளிவான சருமம் முதல் சுத்தமான வயிறு வரை ஆரோக்கியமான பற்கள் வரை அனைத்தையும் அடைய தண்ணீர் உதவுகிறது.
  • ஃவுளூரைடு குழியைத் தடுக்க உதவுகிறது மற்றும் அமிலத் தாக்குதல்களுக்கு பல் எதிர்ப்புத் தெரிவிக்கிறது.
  • ஒருவர் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அளவுக்கதிகமாக தண்ணீர் குடிப்பதை நிறுத்த வேண்டும்.

பல் பரிசோதனைகள்

  • சிறந்த பல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் பல் துலக்குதல் மற்றும் ஃப்ளோஸ் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
  • இவை நல்ல நடைமுறைகள் என்றாலும், பல் மருத்துவர்களின் பங்கை ஒருவர் மறந்துவிடக் கூடாது.
  • உங்கள் வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க, வழக்கமான பல் பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.