இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள, ‘என்மண், என் மக்கள்’ நடைபயணத்தின் 4-வது நாளான இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் உள்ள ஆர்.எஸ்.மங்கலத்தில் மக்களைச் சந்தித்தார்.
கூட்டத்தில் கலந்துரையாடல் போது
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. எங்கு பார்த்தாலும் குடங்களுடன் தள்ளுவண்டிகளைத் தள்ளிச்செல்லும் நிலை உள்ளது. அமைச்சர் கே.என். நேரு கடந்தாண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வோம் என்றார். ஆனால் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை.
நாட்டில் 10 கோடி பனைமரங்கள் உள்ளன. தமிழகத்தில் 5 கோடி பனை மரங்களும், அதில் 1.50 கோடி மரங்கள் இராமநாதபுரம் மாவட்டத்திலும் உள்ளன. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்கடையில் தென்னை,பனை மரங்களிலிருந்துகள் இறக்கி விற்றால், ஏழை பனை, தென்னை தொழிலாளிகளின் வாழ்க்கைத்தரம் உயரும். ஆனால் திமுகவினரின் சாராய ஆலைகள் ஆதாயம் பெற டாஸ் மாக் கடைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. என்று தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் தரணி ஆமுருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.