ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் பள்ளி குழந்தைகளுக்கு வாழ்த்து
ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
நடைபெற்ற போட்டிகள்
சமூக நலத்துறையின் மூலம் ‘மகிளா சக்தி கேந்திரா திட்டத்தின் கீழ்’ குழந்தைகளுக்கு பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்
அதேபோல், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்த ஆட்சியருக்கு ராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ். மெட்ரிக் நர்சரி பள்ளியின் குழந்தைகள் ரோஜா மலர் கொடுத்தனர். அதனையடுத்து ஆட்சியர், இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.