இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம், இராமேஸ்வரம். கீழக்கரை, இராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி,கடலாடி, மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடாபாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் வரும். 27-06-2022 அன்று மாலை 05.30 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சமையல் எரிவாயு விநியோகம் குறைகள் தீர்க்கும் நாள்
RELATED ARTICLES