கடவுளுக்கு நாம் எந்த பொருளைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோமோ, அதற்கு ஏற்ப நல்ல பலன்கள் கிடைக்கும். அபிஷேக படைப்புப் பொருட்களும் பலன்களும் வருமாறு:–
- பழவகைகள் – ஜனவசியம்.
- பஞ்சாமிர்தம் – வெற்றி, நீண்ட ஆயுள்.
- பால் – ஆயுள் விருத்தி.
- தயிர் – திடகாத்திரம்.
- தேன் – குரல் வளமை.
- நெய் – சுகவாழ்வு, மோட்சம்.
- கரும்பு, சர்க்கரை – பகைவரை அழிக்கும்.
- இளநீர் – நன்மக்கட்பேறு, போகம்.
- விபூதி – ஞானம்.
- சந்தனம் – சொர்க்க போகம்.
- பன்னீர் – புகழ்.
- வஸ்திரம் – வெகுமதி.
- புஷ்பம் – சந்தோஷம்.
- கற்பூரம் – அத்வைத முத்தி.
- குங்குமம் – மங்கலம்.
- மாப்பொடி – கடனை தீர்க்கும்.
இறைவனுக்கு நாம் அபிஷேகங்கள் செய்வதன் மூலம் எல்லா செல்வங்களும் பெற்று வளமான வாழ்வு வாழலாம். இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களை நாம் பார்ப்பதனால் நம் வாழ்வில் மிகச் சிறப்பான பலனைப் பெறலாம்.