பரமக்குடி சித்திரை திருவிழாவில் தசாவதார நிகழ்ச்சி
பரமக்குடி சௌராஷ்டிர பிராம்மண மகா ஜனங்களுக்கு பாத்தியமான ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழாவில் தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று முன்தினம் மாலை வண்டியூர் பெருமாள் கோயிலில் இருந்து அழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளி மாட்டா மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்தார்.
தொடர்ந்து வாணியர் மண்டகப்படியில் அழகர் விடிய விடிய தசாவதார சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது அர்ச்சாவதாரம், மச்சம், கூர்மம், வாமனன், பரசுராமர், ராமர், பலராமர், மோகினி அவதாரம் எடுத்தார்.
தசாவதார நிகழ்ச்சியை காண ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மழையைப் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டு விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படியுங்கள் || வீட்டு உபயோக குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்