Friday, March 29, 2024
Homeராமநாதபுரம்ராமநாதபுரத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் ஒருநாள் சுற்றுலா

ராமநாதபுரத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் ஒருநாள் சுற்றுலா

ராமநாதபுரத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் ஒருநாள் சுற்றுலா

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஒரு நாள் உள்ளூர் சுற்றுலா செல்வதற்கான துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

குழந்தைகளின் மகிழ்ச்சிக்கான ஏற்பாடு

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையேற்று மனவளர்ச்சி குன்றியோருக்கான பயிற்சி மைய குழந்தைகளுக்கான ஒரு நாள் உள்ளூர் சுற்றுலா செல்வதற்கான வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அரசு உத்தரவுக்கிணங்க ஒவ்வொரு ஆண்டும் மனவளர்ச்சி குன்றியோர் மையத்தில் பயின்று வரும் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோருடன் ஒரு நாள் உள்ளூர் சுற்றுலா அழைத்துச் சென்று வரப்பட்டு வருகின்றன. இதன் நோக்கம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மனமாற்றம் மற்றும் மகிழ்ச்சி ஏற்படுவதை இதன் நோக்கம்.

இன்ப சுற்றுலாவில் குழந்தைகள்

அந்த வகையில் இந்தாண்டிற்கு இன்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து ஒருநாள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றன.

இதில் 27 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், 27 பெற்றோர்கள், 3 சிறப்பாசிரியர்கள், 2 உதவியாளர்கள் என 59 நபர்கள் செல்கின்றன. இவர்கள் பாம்பன் பாலம், தனுஷ்கோடி, அரிச்சல் முனை, குந்துக்கால், அப்துல் கலாம் நினைவிடம் போன்ற இடங்களுக்கு சென்று வர உள்ளார்கள். அனைத்து குழந்தைகளும் இன்ப சுற்றுலாவினை மகிழ்ச்சியோடு கண்டு களித்து வருமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேல், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் வெங்கடாசலம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments