Saturday, December 9, 2023
Homeபரமக்குடிஆடி பதினெட்டாம் பெருக்கு பூக்குழி இறங்கிய பக்தர்கள்

ஆடி பதினெட்டாம் பெருக்கு பூக்குழி இறங்கிய பக்தர்கள்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சதுரங்க நாயகி அம்மன் ஸ்ரீ சந்தன கருப்பு சாமிகள் ஆலயம் அமைந்துள்ளது.

இங்கு 20 ஆம் ஆண்டு ஆடி பதினெட்டாம் பெருக்கு திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு திருவிழா ஜூலை 25 ஆம் தேதி காப்பு கட்டுதலுன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதனை அடுத்து இன்று மாலை பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருமணம் வரம் வேண்டி, குழந்தை வரம் வேண்டி பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செய்தனர். சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்கழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மேலப்பெருங்கரை கிராம மக்கள் செய்திருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments