சிவகங்கை மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
சிவகங்கையில் ரூ. 83 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
14: சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 72 பயனாளிகளுக்கு ரூ. 83.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.
நடவடிக்கை எடுக்க உத்தரவு
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த பொதுமக்களிடமிருந்து 301 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சி மதுசூதன் ரெட்டி உத்தரவு பிறப்பித்தார்.
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம் சார்பில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 62 லட்சம் மதிப் பிலான கடனுதவிகள் வழங்கினார். இக்கூட்டத்தில், வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.