ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், மாணவர்களுக்கான தனித்திறமை போட்டிகளே அறிவித்தார்
பொறியியல்/ கலை மற்றும் அறிவியல்/மருத்துவம்/ மருத்துவம் சார்ந்த துறை/ பாலிடெக்னிக்/ ஐடிஐ படித்த படிக்கும் மாணவ, மாணவிகள்/ தொழிற்துறை பணியாளர்கள்/தகுதி வாய்ந்த தனிநபர்கள் மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு 30.06.2023-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இராமநாதபுரம் மாவட்ட அளவில் மாணவ/ மாணவிகள்/ இளைஞர்களுக்கான திறன் போட்டிகள் (TN SKILLS-2023) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 30.06.2023-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் வருகிற செப்டம்பர் மாதம் 2024-ஆம் ஆண்டு சர்வதேச திறன் போட்டிகள்(WORLD SKILLS-2024) நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதில் பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் http://naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.
10 துறைகளில் உள்ள 55 தொழிற்பிரிவுகளில் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 30.06.2023-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.