Friday, September 22, 2023
Homeஆன்மிகம்தானம் செய்வதால் விலகும் தோஷங்கள்

தானம் செய்வதால் விலகும் தோஷங்கள்

தானங்கள் செய்வதால் விலகும் தோஷங்கள்

 அன்னதானம்

  • அன்னதானம் செய்வதால் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

மாங்கல்ய தானம்

  • காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும் .

பழங்கள் தானம்

  • பல ஜீவன்களை வதைத்த சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும்.

காய்கறிகள் தானம்

  • பித்ரு சாபங்கள் விலகும். குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.

அரிசி தானம்

  • பிறருக்கு ஒன்றுமே தராமல் தனித்து வாழ்ந்த சாபம் தீரும். வறுமை தீரும்.

ஆடை தானம் 

  • தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களின் கற்பிற்கு ரட்சையாக இருக்கும்.

பசு தானம்

  • இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.

பூ தானம்

  • அந்தஸ்து காரணமாக பிறரை அவமதித்ததால் ஏற்படும் தீவினைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கை சுகமாகவும் , சாந்தமாகவும் அமையும்.

காலணி தானம்

  • பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும்.தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.

குடை தானம்

  • தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.

பாய் தானம்

  • பெற்றவர்களை பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும் .

எண்ணெய் தானம்

  • நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும் .கடன்கள் குறையும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments