தானங்கள் செய்வதால் விலகும் தோஷங்கள்
அன்னதானம்
- அன்னதானம் செய்வதால் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
மாங்கல்ய தானம்
- காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும் .
பழங்கள் தானம்
- பல ஜீவன்களை வதைத்த சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும்.
காய்கறிகள் தானம்
- பித்ரு சாபங்கள் விலகும். குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.
அரிசி தானம்
- பிறருக்கு ஒன்றுமே தராமல் தனித்து வாழ்ந்த சாபம் தீரும். வறுமை தீரும்.
ஆடை தானம்
- தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களின் கற்பிற்கு ரட்சையாக இருக்கும்.
பசு தானம்
- இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.
பூ தானம்
- அந்தஸ்து காரணமாக பிறரை அவமதித்ததால் ஏற்படும் தீவினைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கை சுகமாகவும் , சாந்தமாகவும் அமையும்.
காலணி தானம்
- பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும்.தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.
குடை தானம்
- தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.
பாய் தானம்
- பெற்றவர்களை பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும் .
எண்ணெய் தானம்
- நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும் .கடன்கள் குறையும்.