ராமநாதபுரத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் டிசம்பர் 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 16.12.2022 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் நடைபெறும்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார்.