புயலுக்குப் பின் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்
ராமேசுவரம் மேன்டுஸ் புயல் கரையை கடந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 6 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்
வங்கக்கடலில் கடந்த வாரம் புயல் உருவானது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிமீ முதல் அதிகபட்சமாக 70 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்தது. எனவே மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
புயலுக்கு பின் கடலுக்கு
வானிலை மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து பாம்பன்துறைமுகத்தில் வியாழக்கிழமை 2-ம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது. மேன்டூஸ் புயல் சென்னை அருகே கரையை கடந்த நிலையில் 6நாட்களுக்குப் பிறகு ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் மற்றும் மண்டபம் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல உள்ளனர்.