பரமக்குடியில் உள்ள கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் 20 லட்சம் மதிப்பீட்டில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி. நிதியிலிருந்து சுமார் 20 லட்சம் மதிப்பீட்டில் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கத்திற்கு எம்.பி. நவாஸ் கனி அடிக்கல் நாட்டினார். பள்ளியின் தாளாளர் ஜாஜகான் தலைமை வகித்தார். கீழ முஸ்லிம் ஜமாத் சபையின் தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் சாதிக் அலி, கல்வி குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் வேலுச்சாமி, எம்.எல்.ஏ முருகேசன், பரமக்குடி நகர மன்ற தலைவர் சேது.கருணாநிதி, வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், கவுன்சிலர் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.