Thursday, March 28, 2024
Homeதமிழ்நாடுராமநாதபுரத்தில் தியாகிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ராமநாதபுரத்தில் தியாகிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தியாகிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்களிடமிருந்து 22 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தியாகிகள் வாரிசு முன்னிலையில் தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது, “தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து தீர்வு வழங்கப்படுகிறது. மேலும் பிரதான கோரிக்கைகளான வீட்டுமனை பட்டா, ஓய்வூதியம், வாரிசு சான்று மற்றும் குடிநீர் இணைப்பு வேண்டுதல் தொடர்பான மனுக்கள் மீது தீர்வுகள் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தியாகிகளின் கோரிக்கைகள் குறித்து உரிய தீர்வு வழங்கிட மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.”

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் தியாகிகள், தியாகிகளின் வாரிசுதாரர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments