திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா
‘அக்.25ல் – அக்.30ம் தேதி சூரசம்ஹாரம்’
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபா் 25ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
முதல் நாள் அக். 25ஆம் தேதி
- கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும்.
- 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்.
- 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம்.
- காலை 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதா் யாகசாலைக்கு புறப்படுதல்.
- காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை.
- பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை.
- மற்ற கால பூஜைகள் வழக்கம்போல நடைபெறும்.
2ஆம் நாள் முதல் 5ஆம் நாள் வரை
- அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும்.
- 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்.
- 4 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம்.
அக். 30ஆம் தேதி சூரசம்ஹாரம்.
- அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும்.
- 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்.
- 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம்,
- காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம்.
- பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை.
- மாலை 4 மணிக்கு மேல் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
31ஆம் தேதி திருக்கல்யாணம்.
- அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும்.
- 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்.
- 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம்.
- அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தவசுக் காட்சிக்கு புறப்பாடு.
- மாலை 6.30 மணிக்கு சுவாமி அம்மன் தோள்மாலை மாற்றுதல்.
இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.