சஷ்டி விரதம் இருப்பது எப்படி
- கந்தசஷ்டி விரத துவக்க நாளான அக்.25 முதல் தினமும் அதிகாலை 4:30 6:00 மணிக்குள் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும்.
- மருத்துவர் ஆலோசனையில் இருப்பவர்கள் பால், பழம், பழச்சாறு என எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.
- முருகனுக்குரிய மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’ ‘ஓம் சரவணபவாயநம’ ‘ஓம் முருகா’ ஆகிய மந்திரங்களை ஜபிப்பது அவசியம்.
- திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களை காலையும், மாலையும் பாராயணம் செய்ய வேண்டும்.
- முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றுங்கள். கோயிலுக்கு குழுவாகச் சென்று,ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் ‘அரோகரா’ கோஷமிடலாம்.
- உதாரணம்: கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா.
- மலைக்கோயில்களை வலம் வந்தால் புண்ணியம் உண்டாகும். கோயில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது.
- ஆறுநாட்களும் விரதமிருந்தால் புத்திர தோஷம் விலகும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.