Friday, September 22, 2023
Homeராமநாதபுரம்இளையான்குடி புதிய பேருந்து நிலையம் கட்டுமானத்திற்கு மணல் திருட்டு!

இளையான்குடி புதிய பேருந்து நிலையம் கட்டுமானத்திற்கு மணல் திருட்டு!

இளையான்குடி புதிய பேருந்து நிலையம் கட்டுமானத்திற்கு மணல் திருட்டு!

மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் காவல் நிலையத்தில் புகார்.

சிவகங்கை மாவட்டம்  இளையான்குடியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் நகர் விரிவாக்க அடைந்து வருவதை முன்னிட்டு நகருக்கு வெளியே சிவகங்கைச் சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி ரூ 3 .75 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு தேவையான மணலை அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், அரசு அனுமதியின்றி 20 அடி ஆழத்தில் 100 மீட்டர் தொலைவிற்கு மணல் அள்ளி கட்டுமான பணி நடைபெற்று வருகின்றது என்று , சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் அரசு நிலத்தை சேதப்படுத்தி மணல் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், கனிமவள கொள்ளையை தடுக்க தவறிய அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு அரசு விதிமுறையை மீறி அரசு புறம்போக்கு நிலத்தில் கனிம வள கொள்ளையில் ஈடுபட்டு வரும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments