ராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் யானை திருக்கை மீன் கரை ஒதுங்கியது
ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல் பகுதி ஆழ்கடலில் மட்டுமே காணப்படும் ராட்சத யானைத்திருக்கை மீன்
மீனவர் வலையில் சிக்கிய ராட்சத மீன்
பாம்பன் படகு மீனவர்கள் கரையோர பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சுமார் ஒன்னரை டன் எடையுள்ள ராட்சத யானைத் திருக்கை மீன் வலையில் சிக்கி உள்ளது வலையை எடுக்க முடியாத நிலையில் கரைக்கு படகில் இருந்தே இழுத்து வந்தனர்.மீனவர் வலையில் சிக்கியுள்ளது 1.5 டன் எடையுள்ள ராட்சத மீன்னாது யானை பெண் திருக்கை மீன் என தெரிவந்தது.
ராட்சத மீனை காய்ந்த மீனாக விற்பனை
இதனைத் தொடர்ந்து, 1.5 டன் எடை இருந்ததால் மொத்தமாக மீனை வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை. கருவாடுக்காக கூறு போட்டு பயன்படுத்தினர். இந்த திருக்கை மீனை ரூ.50 ஆயிரம் வரை கருவாடாக விற்பனை செய்யலாம் மீனவர்கள் தெரிவித்தனர்.
ராட்சத யானை பெண் திருக்கை மீனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீனவர் வலையில் சிக்கியதாக என்பது குறிப்பிடத்தக்கது.