- கிருஷ்ணர் ஆவணி மாத அஷ்டமியில், ரோகிணி நட்சத்திரத்தன்று தான் அவதரித்தார்.
- அவர் சிறைச்சாலையில் பிறந்திருந்தாலும், வளர்ந்தது கோகுலத்தில் தான்.
- இதனால் கிருஷ்ணர் அவதரித்த நாளை கிருஷ்ண ஜெயந்தியாக பெரும்பாலானவர்கள் கொண்டாடினாலும், அவர் கோகுலத்திற்கு வந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி நாள் என்று யாதவ குலத்தினரும் கொண்டாடும் வழக்கம் உள்ளது.
- மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணர் அவதரித்த நாளை கிருஷ்ண ஜெயந்தி விழாவாக நாம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.
- கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என பல பெயர்களால் அழைக்கப்படும்.
- இந்த பண்டிகை இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும்.
- புராணங்களின் படி, பகவான் கிருஷ்ணர், ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் நள்ளிரவில், வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக அவதரித்தார் என சொல்லப்படுகிறது.
- இதனால் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி நாளில் கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.
- அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே கோகுலாஷ்டமியாகும்.
ஜென்மாஷ்டமி
- இந்த ஆண்டு செப்டம்பர் 06 ம் தேதி கோகுலாஷ்டமி என நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆனால் செப்டம்பர் 06 ம் தேதி இரவு 09.14 க்கு பிறகே அஷ்டமி திதி துவங்குகிறது.
- அதே போல் செப்டம்பர் 06 ம் தேதி மாலை 03.25 க்கு பிறகே ரோகிணி நட்சத்திரம் துவங்குகிறது.
- செப்டம்பர் 07 ம் தேதி தான் நாள் முழுவதும் அஷ்டமி திதி காணப்படுகிறது.
- அன்று இரவு 09.14 மணிக்கு பிறகே நவமி திதி துவங்குகிறது.
- அதே போல் செப்டம்பர் 07 ம் தேதி மாலை 03.59 வரை ரோகிணி நட்சத்திரம் உள்ளது.
- அதற்கு பிறகே மிருகசீரிஷம் நட்சத்திரம் துவங்குகிறது.
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் நேரம் :
- இதனால் கிருஷ்ண ஜெயந்தியை செப்டம்பர் 06 ம் தேதி கொண்டாடுவதா அல்லது செப்டம்பர் 07 ம் தேதி கொண்டாடுவதா என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
- ஆனால் கிருஷ்ணர் அவதரித்தது நள்ளிரவு நேரத்தில் என்பதால் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதற்கான நாள் செப்டம்பர் 06 ம் தேதி தான்.
- கிருஷ்ண பூஜையை செப்டம்பர் 06 ம் தேதி இரவு 11.57 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 7 ம் தேதி அதிகாலை 12.42 மணிக்கே நிறைவு செய்ய வேண்டும்.*
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் முறை
- கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் செப்டம்பர் 06 ம் தேதி தான் விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
- செப்டம்பர் 07 ம் தேதி அதிகாலை 04.14 மணிக்கு பாரணை செய்து விரதத்தை பூர்த்தி செய்யலாம்.
- செப்டம்பர் 06 ம் தேதி பகல் முழுவதும் விரதம் இருந்து, மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு கோவிலுக்கு சென்று, அங்கு நடக்கும் கிருஷ்ண ஜெயந்தி பூஜைகள், கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளலாம்.
நைவேத்தியங்கள் :
- நள்ளிரவில் கிருஷ்ணரின் சிலை அல்லது படத்திற்கு பழங்கள், மலர்கள், தேங்காய், நெய்யினால் செய்த பலவிதமான இனிப்பு பலகாரங்கள், வெண்ணெய், ஆகியவற்றை படைத்து வழிபட வேண்டும்.
- கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை குழந்தையாக பாவித்து, வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து வழிபட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வ வளம், நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றுடன் கிருஷ்ணரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.