Thursday, September 21, 2023
Homeஅரசியல்நீதிபதிகள் அரசு ஊழியர்களிடம் சரமாரி கேள்வி

நீதிபதிகள் அரசு ஊழியர்களிடம் சரமாரி கேள்வி

அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்!

திருநெல்வேலி மாவட்டம், சிதம்பராபுரம் கிராம ஊராட்சியில் வார்டு மறுவரையறை செய்த போது, சிதம்பராபுரத்தில் உள்ள 84 வீடுகளை பிரித்து பழவூர் மற்றும் ஆவாரைகுளம் பஞ்சாயத்தில் சேர்த்தனர். பழவூர், ஆவாரைகுளம் பஞ்சாயத்தில் சேர்க்கப்பட்ட சிதம்பராபுரம் கிராமத்தில் உள்ள பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும், சொத்து வரி வாங்கவும், அதற்கான ரசீதுகளை வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது.

மனு தாக்கல் – கோர்ட்

வார்டு மறுவரையின் போது பழவூர், ஆவாரைகுளம் பஞ்சாயத்துகளில் சேர்க்கப்பட்ட சிதம்பராபுரம் கிராமத்தில் உள்ள பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும், சொத்து வரியை வசூலித்து ரசீதுகளை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என சிதம்பராபுரத்தை சேர்ந்த ஸ்டாலின் மற்றும் ஜெனிட்டா மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதிகள் – பதவி நீக்கம்

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வில் ஏப்ரல் 8 விசாரணைக்கு வந்தது. அப்போது, பழவூர் மற்றும் ஆவாரைக்குளம் பஞ்சாயத்து தலைவர்களும், மாவட்ட திட்ட அலுவரும் ஆஜராகினர். நீதிபதிகள், கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினீர்கள். ஏன் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை? என்றும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்களை பதவி நீக்கம் செய்ய உத்தரவிடலாமா? எனவும் கேள்வி எழுப்பினர்.

வழக்கு – ஒத்திவைப்பு

வார்டு மறு வரையறையின் போது, சிதம்பராபுரம் பஞ்சாயத்தில் இருந்து பிரித்து பழவூர், ஆவாரைகுளம் பஞ்சாயத்துகளில் சேர்த்த குடியிருப்புகளுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும், முறையாக சொத்து வரிகளை வசூலிப்பதாகவும் பஞ்சாயத்து தலைவர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நீதிபதிகள் வழக்கை ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments