கமுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் நலத்திட்ட முகாமில் கலந்து கொண்ட பயனாளிகள்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாம், கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.மணிமேகலை, எம்.ராஜகோபாலன் (கிராம ஊராட்சிகள்), ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல முடநீக்க வல்லுநர் பா.ஜெய்சங்கர் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.
முகாமில், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யுஐடிஐ கார்டு) பெறுவதற்கான விண்ணப்பங்கள், ரயில், பேருந்துப் பயணச் சலுகை அட்டை, மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.எலும்பு முறிவு மருத்துவர் பிரபாகரன், மனநல மருத்துவர் டேவிட் மலையரசன், மருத்துவர் நாகரஞ்சித், கண் மருத்துவர் சிந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.