Friday, March 29, 2024
Homeராமநாதபுரம்பரமக்குடியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

பரமக்குடியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

பரமக்குடியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் பரமக்குடி எமனேஸ்வரத்தில் உள்ள எஸ்.என்.வி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் சார்பு நீதிபதி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவர் சதீஷ் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பிரமணியன், நீதித்துறை நடுவர் நீதிபதி பாண்டி மகாராஜா, வழக்கறிஞர் மாடசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் தமிழ் பட்டதாரி ஆசிரியர் மாலதி அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியை மேகலாதேவி சிறப்புரையாற்றினார். இம்முகாமில் 1200க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்து கொண்டு நீதிபதிகள் கூறிய கருத்துக்களை கேட்டு தெரிந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம், வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர். சட்டத் தன்னார்வலர் முருகேசன் நன்றி கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments