- சங்குப்பூ கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் ,காடுகளில், தோட்டங்களில் வளரக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புத செடியாகும் sangu poo tamil.
- அது என்ன சங்குப்பூ என்று சிலருக்குத் தோன்றலாம் நாங்கள் மல்லிகை பூ, ரோசாப்பூ என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம் சங்குப்பூ புதுசாக இருக்கிறதே என்று நினைக்கலாம்.
- ஆனால் சங்கு பூவில் இருக்கும் மருத்துவ குணங்களை நீங்கள் அறிந்து கொண்டால்.
- அதனை வீட்டிலேயே வளர்க்க ஆரம்பித்து விடுவீர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
- இப்பொழுது பெரும்பாலான மக்கள் பால்,காப்பி, டீ போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக கிரீன் டீ ,லெமன் டீ அருந்திக் உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள விரும்புகின்றனர்.
- அந்த வகையில் சங்கு பூவிலிருந்து செய்யப்படும் ப்ளூ டீயும் பிரபலமாகி வருகிறது.
- சங்குப்பூ பொதுவாக நீல நிறம் மற்றும் வெள்ளை நிறமாகவும் வளரக்கூடியது.
- நீல நிற சங்கு பூவை காட்டிலும் வெள்ளை நிற பூக்களின் மருத்துவ குணங்கள் ஏராளம்.
- சங்கு பூவை சங்கு புஷ்பம், காக்கரட்டான், கன்னிகொடி, மாமூலி போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
- இதன் பூக்களில் மட்டுமல்லாமல் அதன் இலைகள் ,வேர்கள் ஆகியவற்றிலும் மருத்துவ குணங்கள் ஏராளம்.
- சங்குப்பூ இலையின் சாற்றை சாப்பிட்டு வருவதால் மனநிலை பாதிக்கப் படாது.
- இதனால் மனநிலை பாதிக்கப் படாமல் இருக்க தொடர்ந்து சங்கு இலையின் சாற்றை சாப்பிட வேண்டும்.
- இதனால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சங்குப்பூ இலையின் சாறு கொடுத்து வரலாம்.