மேலாய்குடி அரசு பள்ளி மாணவர்கள் என்.எஸ்.எஸ் திட்ட முகாம்
பரமக்குடியில் மேலாய்குடி அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் என்.எஸ்.எஸ் முகாமில் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேலாய்குடி அரசு மேல்நிலைப் பள்ளியின் சார்பாக நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக ஏழு நாள் சிறப்பு முகாம் அய்யநாதபுரம் கிராமத்தில் நடைபெற்றது. மேலாய்குடி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயசங்கர் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் மாலதி முன்னிலை வகித்தார். கிராம தலைவர் இராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து , பள்ளி ஆசிரியர்கள் மணிகண்டன், கபில்தேவ், பூமி ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தனார். கிராம மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் இராமநாதன் நன்றி கூறினார்.