பெண் தலைமை காவலருக்கு “தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் விருது”
டெல்லியில் நடைபெற்ற தேசிய குற்ற ஆவணக் காப்பகம் விருது வழங்கும் விழாவில்பெண் தலைமை காவலருக்கு “தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் விருது வழங்கப்பட்டது.
பெண் தலைமை காவலர்
திருநெல்வேலி மாவட்டம் குற்ற ஆவண காப்பகத்தில் பணிபுரிந்து வரும் பெண் தலைமை காவலர் தங்கமலர்மதிக்கு காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளின் தரவுகளை ஆராய்ந்து ஒப்பீடு செய்து அடையாளம் காணப்படாத 19 பிரேதங்களின் அடையாளம் கண்டறிந்த அமைக்காகவும், பல்வேறு இடங்களில் காணாமல் போன 16 இருசக்கர வாகனங்களை குற்ற ஆவணங்களை ஆராய்ந்து அவற்றை மீட்டு வழக்குகளில் முன்னேற்றம் காண உதவியதற்காகவும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தலைமை இயக்குநர் பாராட்டு
பெண் தலைமை காவலர் தங்கமலர் மதியை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பெண் தலைமை காவலர் “தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் விருது” வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.