Friday, September 22, 2023
Homeராமநாதபுரம்நீத்தார் நினைவு தினம் கடைப்பிடிக்கபட்டது

நீத்தார் நினைவு தினம் கடைப்பிடிக்கபட்டது

நீத்தார் நினைவு தினம் கடைப்பிடிக்கபட்டது

ராமநாதபுரம் ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் வீரர்களின் நினைவாக நீத்தார் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது இதன்படி நீத்தார்நினைவு தினம் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் கலந்து கொண்டர்

மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், டி.ஐ.ஜி. மயில்வாகனன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டு பணியின் போது இறந்தவர்களின் நினைவாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வாளர் சிவா தலைமையில் ஆயுதப்படை காவலர்கள் 66 குண்டுகள் முழங்க நீத்தார் நினைவு நாள் மரியாதை செலுத்தினர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை பேசியதாவது .கடந்த 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த வீரர்களின் தியாகத்தினை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந் தேதி நீத்தார் நினைவுதினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடந்த ஒரு ஆண்டில் பணியின்போது உயிரிழக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படும்.

மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்,

இவ்வாறு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி முதல் கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பணியின் போது இறந்த 261 வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்படுகிறது என்றார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. இதில், கடற்படை மற்றும் கடலோர காவல்படை கமாண்டர்கள், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், ராமநாதபுரம் நகர் ராஜா, ஆயுதப்படை அதிகாரிகள், ஊர்க்காவல் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments