கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி சார்பில் என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம்
பரமக்குடி அருகே உள்ள நகரகுடி கிராமத்தில் கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் பங்கேற்றனர்
இம்முகாமிற்கு பள்ளியின் தாளாளர் என்.ஜாஜஹான், தலைமை தாங்கினார். கீழமுஸ்லிம் ஜமாத், சபைதலைவர் எம்.சாகுல்ஹமீது, செயளாளர் எம்.சாதிக்அலி, பொருளாளர் ஏ.லியாக்கத்அலி கான், மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.அஜ்மல்கான் வரவேற்றார். முகாமிற்கு இராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் ஏ.பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் ஜெ.ரவி, மாவட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மாணவர்களின் பயிற்சி
மாணவர்கள் என்.எஸ்.எஸ் முகாமில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்து கூறினர். ஏழுநாட்கள் நடைபெற்ற இம்முகாமில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களை சுத்தம் செய்தல், சாலைகளை தூய்மைபடுத்துதல், டெங்கு விழிப்புணர்வு பேரணி, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு, யோகாசன பயிற்சி, மரக்கன்று நடுதல், கபசுரகுடிநீர் வழங்குதல், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் என்.இந்திரஜித் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் சிறப்பாக செய்தனர். உதவித்தலைமை ஆசிரியர் எம்.புரோஸ்கான் நன்றி கூறினார்.