மாநில அளவிலான பூப்பந்து போட்டிக்கு பரமக்குடி கீழ முஸ்லிம் மாணவிகள் தேர்வு
மாநில அளவிலான பூப்பந்து போட்டிக்கு பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு பெற்றனர்.
இராமநாதபுரம் மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டிகள் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் வட்டார போட்டிகளில் வெற்றி பெற்ற 500 மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாணவ மாணவிகள் பங்கேற்றனர்
இதில் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள்19 வயதுக்கு உட்பட்ட பூப்பந்து போட்டியில் பல்வேறு அணிகளை தோற்கடித்து தங்கப் பதக்கத்தையும் சான்றிதழையும் பெற்றனர்.இம்மாணவிகள் அடுத்த மாதம் தர்மபுரியில் நடைபெறும் மாநில அளவிளான பூப்பந்து போட்டிகளில் பங்கு பெறுகின்றனர்
பரிசுகளை வழங்கிய ஆசிரியர்கள்
வெற்றி பெற்ற மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித், சிவகுருராஜா, அன்வர்ராஜா, நிரோஷாபானு ஆகியவரையும் கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் எம்.சாகுல்ஹமீது, செயலர் எம்.சாதிக்அலி, பொருளாளர் ஏ.லியாக்கத்அலி கான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்களும் பள்ளியின் தாளாளர் என் ஜாஜஹான் தலைமையாசிரியர் எம்.அஜ்மல்கான் உதவித் தலைமையாசிரியர் எம்.புரோஸ்கான் உள்ளிட்ட ஆசிரியர்கள் பெரிதும் பாராட்டினர்.