Friday, September 22, 2023
Homeபரமக்குடிபரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு

பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு

பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு

பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு தேர்வு பெற்றது. வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளிகள் மாவட்டப் போட்டிகளில் பங்கு பெற்றன. மாவட்டப் போட்டிகள் பெருமாள் கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தங்கப் பதக்கம்

இப்போட்டிகளில் மாவட்ட முழுவதிலும் இருந்து 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 14 வயது, 19 வயதுக்குட்ட எறிபந்துப் போட்டியில் பல்வேறு அணிகளைத் தோற்கடித்து இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கமும் சான்றிதழும் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றனர்.

மாநில போட்டிக்கு தேர்வு

இம்மாணவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் மாநில அளவிலான எறிபந்துப் போட்டிகளில் பங்கு பெறுகின்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித், சிவகுருராஜா, அன்வர் ராஜா, நிரோஷா பானு ஆகியோரை கீழ முஸ்லிம் ஜமாத் தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் சாதிக் அலி, பொருளாளர் லியாகத் அலி கான், பள்ளியின் தாளாளர் ஷாஜஹான், பள்ளியின் தலைமையாசிரியர் அஜ்மல்கான் மற்றும் ஆசிரியர்கள் பெரிதும் பாராட்டினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments